காஞ்சிபுரத்தில் உள்ள ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில் கோவில் கோபுரங்கள் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.