திற்பரப்பு அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வந்த தொடர் மழையால், கடந்த 3 நாட்களாக பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், கனமழை ஓய்ந்ததால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து கோதை ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.