கோடை விடுமுறை முடிந்து காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்களுக்கு பன்னீர் தெளித்தும், இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. திருநள்ளாறு அரசு தொடக்க பள்ளியில் பள்ளிகளில் வாழைமரம் கட்டி மாணவ, மாணவிகளுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் குங்குமம் இட்டு, பூ கற்கண்டு இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
மாணவர்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க தண்ணீர் குடிப்பதற்காக பள்ளி நேரத்தில் மூன்று முறை இடைவேளை விடுவதற்கு புதுச்சேரி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.