விவசாயிகளை சந்திக்க மறுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு விவசாயிகள் ஒன்றுபடுவோம் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையை திறப்பது, கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை பெற்று கொடுப்பது, மேகதாது அணை கட்டுமானத்தை சட்டப்படி தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான நீதி கேட்கும் பேரணி கரூரை வந்தடைந்தது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாட்டின் விளைநிலங்களை கார்ப்பரேட்டிற்கு மு.க.ஸ்டாலின் அரசு தாரை வார்ப்பதுடன், அதனுடன் கைகோர்த்துக்கொண்டு காவிரி நீரை பெற்று தர மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.