மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இதேபோல் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியும் தனது பணிகளை இன்று தொடங்கினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், மீண்டும் அமைச்சர் பதவி வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தங்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா உலகத் தரம் வாய்ந்த, நவீன உள்கட்டமைப்புடன் விரைவான வேகத்தில் வளர்ச்சி அடையும் என கட்கரி தெரிவித்துள்ளார்.