வேலூர் மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிரடி படையினருடன் வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் தெருவில் உள்ள அரசு இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 45 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, காவல்துறையின் அதிரடிப்படையினருடன் அதிகாரிகள் கன்சால்பேட்டைக்கு வந்தனர். அப்போது தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை வீடுகளை இடிக்க விடமாட்டோம் என மக்கள் போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.