தேனி மாவட்டத்தில் சோத்துப்பாறை அணையின் தரம் குறித்து தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சோத்துப்பாறை அணை விளங்கி வருகிறது.
இந்நிலையில் அணையின் தரம், கட்டடத்தின் உறுதித் தன்மை உள்ளிட்டவை குறித்து தேசிய அணைகள் பாதுகாப்புக் குழு தென் மண்டல தலைவர் அஜய் குமார் சின்ஹா தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து சோத்துப்பாறை அணையின் சுரங்கப் பாதைக்குள் சென்று தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுவினர் பார்வையிட்டனர்.