குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்காத தமிழக அரரைக் கண்டித்தும், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், திருச்சி கல்லணை காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக கோரி, காவிரி தமிழ் தேச விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கத்தினர் கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் திருச்சி – தஞ்சாவூர் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.