நாமக்கல் அருகே நல்லாயி கோயிலில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில் மகா கணபதி மற்றும் நல்லாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நான்காம் கால யாக பூஜை, 108 திரவிய ஹோமத்துடன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மகா கணபதி, நல்லாயி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.