திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர பிரதேச முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நேற்று பதவியேற்றார். இதனையடுத்து திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்ற அவர், சாமி தரிசனம் செய்தார்.
சந்திரபாபு நாயுடு மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் மற்றும் குடும்பத்தினரும் அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். சந்திரபாபு நாயுடுவின் வருகையை முன்னிட்டு திருமலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்