கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருசக்கர வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார். சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான சவரிமுத்து சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் சவரிமுத்து மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அஜித்குமார் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.