புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் பகுதியில் விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு பெண் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார்.
ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த புஷ்பராணி என்பவரை கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கியது. இதில் மயக்கமடைந்த அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஊழியர்கள் கழிவுநீர் குழாய்கள் முழுமையாக சரிசெய்யப்படவில்லை எனக் கூறினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.