திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு வருகைபுரிந்து ஏழுமலையான் தரிசித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா சர்வதேச அளவில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் எனவும் அதில் தெலுங்கு மக்கள் முக்கிய பங்காற்றுவார்கள் எனவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், உலகம் முழுவதும் ஏழுமலையானுக்கு கோவில்கள் கட்டி அவரது புகழை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் தெரிவித்தார்.