பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள 2 கதவணைகளை மாற்றும் பணி சுமார் 9 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் விளங்குகிறது. இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள 16 கதவணைகளில் 2 கதவணைகள் பழுதடைந்து உள்ளதால் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
மேலும், நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளதால் கதவணைகளை மாற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் இந்த பணிகள் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.