புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முடியவுள்ள நிலையில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் நிறைவடையும் நிலையில் புதுச்சேரியில் ஆழ்கடல் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நள்ளிரவில் தடைக்காலம் முடிந்தவுடன் மீனவர்கள் மீன்பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.