பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் கைதான 9 பேரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013ம் ஆண்டு நிலப்பிரச்சினை தொடர்பாக கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக பொன்னுசாமி, அவரின் மகன்களான பாசில், போரிஸ் மற்றும் வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கி, கடந்த 2021ம் ஆண்டில் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 9 பேரின் குற்றங்களையும் காவல்துறையினர் நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.