பிரதமர் மோடி வருகிற 20ம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வரும் 20ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் வருகைதரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரையிலான ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
3வது முறையாக பதவியேற்றபின் முதம்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.