குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது.
குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர்ன் உடல்களும் கொச்சி வந்தன. சென்னை ராயபுரம் சிவசங்கரன், கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன், ராமநாதபுரத்தை சேர்நத் ராமு, கடலூர் மாவட்டம் முட்டம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை, செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப் உள்ளிட்ட 7 பேரின் உடல்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக்கொண்டார்.
பின்னர் உடல்கள் தனித்தனி ஆம்பூலன்ஸ் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.