குவைத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட 45 உடல்களில் 31 உடல்கள் கேரளாவில் இறக்கப்பட்டதாகவும் எஞ்சிய உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கேரளாவை சேர்ந்த 23 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்கள் கொச்சி விமான நிலையத்தில் இறக்கப்பட்டதாக தெரிவித்தார். தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஐந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தீ விபத்து குறித்து குவைத் அரசு தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குவைத் அரசு உறுதியளித்துள்ளதாகவும் கீர்த்தி வர்தன் சிங் கூறினார்.