மதுரையில் ஆடம்பர பங்களாவில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் ஒருவரை கைது செய்த போலீசார் முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
ஜெய்ஹிந்த்புரம் அருகே விஜயராகவன் என்ற நபர் ஆடம்பர பங்களாவை வாடகைக்கு வாங்கிய நிலையில் கிரகப்பிரவேசம் நடைபெற்றது.
அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் விஜயராகவன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பூஜையறையில் 32 கிலோ கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் விஜயராகவனை தேடி வருகின்றனர்.