சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் - கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!
May 12, 2026, 04:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் – கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 07:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூவம் ஆற்றின் குறுக்கே மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலைத் திட்டத்தின் போது, ஆற்றில் கட்டுமானக் கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு பகுதியில் கூவம் ஆற்றுக்குள் மண் கொட்டப்பட்டு நிலம் சமப்படுத்தப்படுவதால், ஆற்றின் ஓட்டம் பாதிக்கப்படுவதாக 2024-ஆம் ஆண்டு வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது.

இது குறித்த விசாரணையில், கூவம் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த 238 தற்காலிக கட்டுமான மேடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கூவம் ஆற்றங்கரையில் சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் கட்டுமான கழிவுகளும், 39 ஆயிரம் மெட்ரிக் டன் இதர கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த சென்னை மாநகராட்சி, கூவம் ஆற்றங்கரையில் இருந்த 14 ஆயிரத்து 257 ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு 13 ஆயிரத்து 484 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்தது.

தொடர்ந்து, கூவம் ஆற்றைப் பழைய நிலைக்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து 50 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் மத்திய நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம், எந்த வித கட்டுமான கழிவுகளையும் கூவம் ஆற்றில் கொட்டக் கூடாது எனவும், பணிகளுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் இயந்திரங்களை, வேலை முடிந்தவுடன் கூவம் ஆற்றுப்பகுதிகளில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அல்லது கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பதை நீர்வளத் துறை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும்,

பருவமழைக் காலங்களில் கூவம் ஆற்றின் நீரோட்டம் எக்காரணம் கொண்டும் தடைபடாமல் இருப்பதற்காக நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

Tags: National Green Tribunaldumping of construction debris into the Cooum RiverChennai Port–Maduravoyal Elevated Expressway project.
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் நான்கு அதிகார மையங்களை வீழ்த்த வேண்டும் – இபிஎஸ் அழைப்பு!

Next Post

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

Related News

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies