சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் - கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!
Jun 28, 2026, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை பணிகள் – கூவம் ஆற்றில் கட்டுமான கழிவுகளை கொட்ட தடை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 07:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூவம் ஆற்றின் குறுக்கே மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலைத் திட்டத்தின் போது, ஆற்றில் கட்டுமானக் கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு பகுதியில் கூவம் ஆற்றுக்குள் மண் கொட்டப்பட்டு நிலம் சமப்படுத்தப்படுவதால், ஆற்றின் ஓட்டம் பாதிக்கப்படுவதாக 2024-ஆம் ஆண்டு வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது.

இது குறித்த விசாரணையில், கூவம் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த 238 தற்காலிக கட்டுமான மேடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கூவம் ஆற்றங்கரையில் சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் கட்டுமான கழிவுகளும், 39 ஆயிரம் மெட்ரிக் டன் இதர கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த சென்னை மாநகராட்சி, கூவம் ஆற்றங்கரையில் இருந்த 14 ஆயிரத்து 257 ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு 13 ஆயிரத்து 484 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்தது.

தொடர்ந்து, கூவம் ஆற்றைப் பழைய நிலைக்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து 50 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் மத்திய நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம், எந்த வித கட்டுமான கழிவுகளையும் கூவம் ஆற்றில் கொட்டக் கூடாது எனவும், பணிகளுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் இயந்திரங்களை, வேலை முடிந்தவுடன் கூவம் ஆற்றுப்பகுதிகளில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அல்லது கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பதை நீர்வளத் துறை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும்,

பருவமழைக் காலங்களில் கூவம் ஆற்றின் நீரோட்டம் எக்காரணம் கொண்டும் தடைபடாமல் இருப்பதற்காக நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

Tags: National Green Tribunaldumping of construction debris into the Cooum RiverChennai Port–Maduravoyal Elevated Expressway project.
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் நான்கு அதிகார மையங்களை வீழ்த்த வேண்டும் – இபிஎஸ் அழைப்பு!

Next Post

திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை – நிர்மலா சீதாராமன்

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies