சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!
Jun 28, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீரமைப்பு பெயரில் சிதைக்கப்பட்ட அடையாள சின்னம் : குற்றால அருவியில் தரத்துடன் அமையுமா புதிய பாதுகாப்பு வளைவு? சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 25, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தின் அடையாளச் சின்னமாக விளங்கிய மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவு, சீரமைப்பு பணி என்ற பெயரில் முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுதொடர்பான முழு விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…

குற்றாலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது ஆர்ப்பரித்துக் கொட்டும் மெயின் அருவியும், அதன் முன்னே கம்பீரமாக நின்றிருந்த அந்தப் பாதுகாப்பு வளைவும்தான். நூறு ஆண்டுகளைக் கடந்தும், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி நின்ற அந்த வரலாற்று அடையாளம், தற்போது சீரமைப்புப் பணி என்ற பெயரில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்த எஸ்.ஏ. அண்ணாமலை செட்டியார் என்பவரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த வளைவு, வெறும் அழகுக்காகக் கட்டப்பட்டதல்ல. அது ஒரு துல்லியமான பாதுகாப்பு அளவுகோலாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அருவியில் விழும் தண்ணீர் இந்த வளைவைத் தாண்டி வரும்போது, அது குளிக்க ஆபத்தான அளவு எனக்கருதப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வந்தன.

1992-ல் ஏற்பட்ட கோரமான வெள்ளம் உட்பட, கடந்த ஒரு நூற்றாண்டில் சந்தித்த பல்லாயிரக்கணக்கான வெள்ளப் பெருக்குகளிலும் இந்த வளைவு ஒரு சிறு விரிசல் கூட இன்றி நிலைத்து நின்றது. இந்நிலையில், சுற்றுலாத் துறையின் சார்பில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குற்றாலத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், அருவிக்கரையை விரிவுபடுத்தி, ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் குளிக்கும் வகையில் தரைத்தளத்தை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பழைய வளைவை அகற்றிவிட்டு, அதே இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வளைவு மற்றும் ஆழமற்ற குளம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் ஊடகங்களுக்குக் கூட தெரியப்படுத்தாமல், நூறு ஆண்டு கால உறுதியான வளைவை இடித்தது துரதிஷ்டவசமானது என்று முன்னாள் எம்எல்ஏவும், இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவருமான ரவி அருணன் வேதனை தெரிவித்துள்ளார்.

அருவி முன் அமைக்கப்பட்டுள்ள தடாகம் என்றழைக்கப்படும் குழியை மூடினால், வெள்ள நீர் ஆற்றுக்குள் செல்லாமல் பெண்கள் குளிக்கும் பகுதி வழியாக ஊருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என அப்பகுதிவாசிகள் எச்சரிக்கின்றனர். மேலும், பழைய வளைவு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்தது என்றும், இனி வரும் புதிய கட்டமைப்பு அந்தத் தரத்துடன் இருக்குமா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர் உள்ளூர் வாசிகள்…

புதிதாக அமையவுள்ள வளைவு, இடிக்கப்பட்ட வளைவை போன்று, அதே பலத்துடனும், தரத்துடனும் அமைய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த குற்றாலப் பிரியர்களின் ஒற்றைக் கோரிக்கையாக இருக்கிறது…..

Tags: courtallam main fallsCourtallam falls iconic symbolhistorical landmarkS.A. Annamalai ChettiarcourtallamKaraikudirenovation work
ShareTweetSendShare
Previous Post

டிரம்பை கேலி செய்த மீம்ஸ், டிஜிட்டல் பிரசாரங்கள்! புதிய பரிமாணத்தை எட்டும் அமெரிக்கா – ஈரான் போர் – சிறப்பு தொகுப்பு!

Next Post

8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் – அர்ச்சனா பட்நாயக்

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies