புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற தம்பதியர் மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி, சாரம் தொகுதிக்குட்பட்ட சுந்தமேஸ்திரி வீதியை சேர்ந்த பழனி, பவானி தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டிற்குள் உள்ள கழிப்பறைக்கு பவானி சென்றபோது, கண் எரிச்சல் மற்றும் லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கணவர் பழனியை உதவிக்கு அழைத்தபோது அவருக்கும் அதே உணர்வு இருந்துள்ளது. இருவரும் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், கழிப்பறைக்கு சென்ற தம்பதியருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.