சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் என்பவர், புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கைதி கோபால், திடீரென சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சிறைச்சாலையின் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தேடியும் கோபாலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.