செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே சொத்துப் பிரச்சனையால் மின்வாரிய ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கன்னிவாக்கத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான உத்திராடத்துக்கும், அவரது சகோதரர் சங்கருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில், உத்திராடத்தை அவரது சகோதரரின் மகனான சுபாஷ் என்பவர் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த உத்திராடம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் சுபாஷை தேடி வருகின்றனர்.