கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆனி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.
இதையடுத்து, நாளை அதிகாலை 5 மணிக்கு வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதிகாலை 5.20 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.