விமான பயணத்தின் போது வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை : டிஜி யாத்ரா சேவை அறிமுகம்!
Oct 22, 2025, 09:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான பயணத்தின் போது வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை : டிஜி யாத்ரா சேவை அறிமுகம்!

Web Desk by Web Desk
Jun 16, 2024, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விமான நிலையத்தில், இனி பயண சீட்டுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக டிஜி யாத்ரா சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிஜி யாத்ரா சேவை என்றால் என்ன? அதனுடைய வசதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நமது விமான பயணத்தை சீராகவும் எளிமையாகவும் மேற்கொள்வதற்கு ஒரு புதிய திட்டத்தினை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதுதான் டிஜி யாத்ரா வசதி. கடந்த மே 6ம் தேதி முதல் சென்னையில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

டிஜி யாத்திரை என்பது ஆவணங்கள் ஏதும் இல்லாமல் முகத்தை மட்டும் அடையாளமாக கொண்டு பயணிக்கும் வசதி. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அடையாள அட்டை , விமான நிலைய நுழைவுச் சீட்டு போன்ற காகித ஆவணங்களை கொண்டுவரத் தேவையில்லை. விமான நிலையத்துக்குள் நுழையும் போதும், பாதுகாப்பு சோதனை மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அடையாளம் காணும் கருவியில் தங்கள் முகத்தை காட்டினால் போதும்.

இதற்காக பயணிகள் தங்கள் புகைப்படம், ஆதார் எண் மற்றும் பயணம் தொடர்பான விவரங்களை நவீன தொழில் நுட்பம் கொண்ட டிஜி யாத்ரா செயலியில் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.

டிஜி யாத்ரா திட்டம் முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா, புனே, ஐதராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களிலும் தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்த நிலையில் இந்த சேவை சென்னை விமான நிலையத்தில் டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 4 இன் அனைத்து நுழைவு  வாயில்களிலும் கிடைக்கிறது, இந்த திட்டம் உள்நாட்டு பயணிகளுக்கு எளிமையான பயணத்தை ஏற்படுத்தி தருவதோடு இந்த சேவை போர்டிங் கேட்களில் வரிசையில் செலவழிக்கும் நேரத்தை கணிசமாகவும் குறைக்கிறது, இது ஒட்டுமொத்த பயண அனுபவத்தையும் சிறப்பாக்குவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் வளர்ச்சி பாதையை நோக்கிக் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சிகளில் மத்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் டிஜி யாத்ரா திட்டம் பெரிய மைல்கல் திட்டமாக விளங்குகிறது.

 

Tags: chennai airportDigi Yatra Servicequeues for boarding tickets
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் சென்னை வருகை ஒத்திவைப்பு!

Next Post

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies