நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புக் கொண்ட மர்ம நபர், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, போலீசார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக எந்த வித பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.