ஜம்மு காஷ்மீர் பந்திபோராவில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் நேற்று நான்கு இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துள்ளன. இந்நிலையில் பந்திபோரா மாவட்டம் வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.