பிரதமராக பதவியேற்ற பின் இன்று முதல்முறையாக வாரணாசி செல்லும் மோடி, விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17-ஆவது தவணையாக 20,000 கோடி ரூபாயை விடுவிக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி, ஒரு லட்சத்து 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.
மாலை 5 மணியளவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர், 9.26 கோடி விவசாயிகளுக்கு 17-ஆவது தவணையாக 20,000 கோடி ரூபாயை விடுவிக்கிறார்.
நாட்டின் பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின், இத்திட்டத்தின்கீழ் ரூ.20,000 கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் மோடி முதல் கையெழுத்திட்டார்.
இதனைத்தொடர்ந்து ‘வேளாண் தோழிகள்’ திட்டத்தின்கீழ் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 30,000 பெண்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார்.
பின்னர் தசாசுவமேத படித்துறையில் கங்கை ஆரத்தியில் பங்கேற்கும் பிரதமா், காசி விஸ்வநாதா் கோயிலில் வழிபாடு நடத்துகிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு வாரணாசியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.