ஜம்மு காஷ்மீரின் நூரி சாம்ப் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
பூஞ்ச் மாவட்டம் பஹ்ரமலா கிராமத்தின் அருகே உள்ள இந்த நீர் வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டுகிறது.
இதனை காண அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள், செல்பி எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.