வெளிமாநில பதிவு எண் கொண்ட 800 ஆம்னி பேருந்துளை இன்று முதல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளிமாநில பதிவெண் கொண்ட 800 ஆம்னி பேருந்துகள் விதிமீறி இயக்கப்படுவதால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 34 கோடியே 56 லட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,வெளிமாநில பதிவெண் பெற்று தமிழகத்தில் பதிவு செய்யப்படாத ஆம்னி பேருந்துகளை இயக்கினால், அந்த பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள போக்குவரத்து துறை,
வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. தடைசெய்யப்பட்ட ஆம்னி பேருந்து விவரவங்களை www.tnsta.gov.in என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும், தடைசெய்யப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் பயணிகளுக்கு போக்குவரத்து துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.