நீட் முறைகேடு புகார் தொடர்பாக 2 வாரங்களில் விளக்கம் அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடப்பாண்டு நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
நீட் தேர்வில் யாராவது பூஜ்யம் புள்ளி பூஜ்யம் பூஜ்யம் ஒன்று சதவீதம் அலட்சியமாக இருந்தாலும், அது குறித்து ஆய்வு செய்ய வேண்டுமெனவும், ஒரு தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கக்கூடிய சூழலை யோசித்துப் பார்க்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இவ்வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.