இந்தியா – கனடா இடையேயான உறவை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அண்மையில், இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ட்ரூடோ இதனை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஜஸ்டின் ட்ரூடோ, இரு நாட்டு பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.