புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
தனியார் பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு தொண்டைமான் ஊரணி பகுதியில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில் அனைவரும் அங்கிருந்தவர்கள் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.