பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் வினோத் சவுகான் ஆகியோரின் நீதிமன்ற காவலை டெல்லி நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மற்றொரு குற்றவாளியான வினோத் சவுகான் ஆகியோரின் நீதிமன்ற காவலை ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து இருவரும் திகார் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட மொத்தம் 38 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.