தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் 150 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி, மேலக்காடு மற்றும் வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, தம்பிக்கோட்டை சின்னத்தங்காடு பகுதியில் ஐந்து பேரல்களில், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு தேவையான 150 லிட்டர் சாராய ஊறல் பதுக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து அழித்தனர்.
இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.