விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், ஆனி மாத பௌர்ணமியையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியையொட்டி, கடந்த 19 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரையிலும், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியது.
இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சதுரகிரி கோயிலின் அடிவாரப் பகுதியான தானிப்பாறையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.