திருப்பத்தூர் மாவட்டம், கொத்தூரில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சீரமைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொத்தூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் உங்கள் ஊரில் ஒரு நாள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இதுவரை பள்ளியை ஆய்வு செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன், பள்ளியை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க முன்வர வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.