ஈரோட்டில் உள்ள விவசாய இயந்திரங்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
சோலார் பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய இயந்திரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடையில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.