பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு குட்கா பொருட்களை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்திவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து புனமாராம் சௌத்ரி என்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 399 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.