நெல்லையில் தனியார் உணவகத்தில் வாங்கிய உணவில் பல்லி இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சேரன்மகாதேவியில் இயங்கிவரும் தனியார் உணவகத்தில், சதீஷ் என்பவர் ர் பொங்கல் வாங்கிச் சென்றார். பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் பல்லி இறந்து கிடப்பதகா கூறப்படுகிறது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சதீஷ், சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
அதன் பேரில் உணவகத்துக்கு சென்ற அதிகாரிகள், சமயலறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கூறி, கடையின் உரிமையாளருக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடையை மூட உத்தரவிட்டார்.