தமிழகத்தில் மெத்தனால் பயன்பாட்டுக்கு கோட்பாடுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
கண்ணதாசனின் 98வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது உருவப் படத்திற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு பற்றி குறைகூற வேண்டும் என்பதற்காகவே கல்வித்துறையில் எதிர்க்கட்சிகள் அரசியலை புகுத்துவது சரியல்ல என தெரிவித்தார்.
கள்ளச்சாராயம், காய்ச்சுவதற்கும், விற்பனை செய்யப்படுவதற்கும் அண்ணாமலை தான் காரணம் என திமுகவின் மூத்த நிர்வாகி கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார்.