புதுச்சேரியில் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
முதலியார் பேட்டையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டார். அப்போது, சாராயம் பதுக்கி விற்பனை செய்த மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சக்கரவர்த்தி மற்றும் அவரது மகன் ராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களது வீட்டில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.