செங்கோல் சர்ச்சை!: தமிழ் கலாச்சாரத்திற்கு இண்டி கூட்டணி அவமதிப்பு!
Oct 11, 2025, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செங்கோல் சர்ச்சை!: தமிழ் கலாச்சாரத்திற்கு இண்டி கூட்டணி அவமதிப்பு!

Web Desk by Web Desk
Jun 28, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையின் அருகே நிறுவப் பட்டிருக்கும் செங்கோலை அகற்ற வேண்டும் என்று சமாஜ் வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.செளத்ரி வைத்த கோரிக்கையை , சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்திருக்கிறார். எனினும், இந்த கோரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவில், ஆங்கிலேயர்களிடமிருந்து அதிகார மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் பயன்படுத்தப்பட்டது.

திருவாவடுதுறை ஆதீனத்தின், 20வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் கொடுத்தனுப்பிய செங்கோலை, தம்பிரான் சுவாமிகள் மவுண்ட்பேட்டனிடம் தந்தார்.

தேவார பதிகங்கள் பாட , புனித நீர் தெளிக்கப் பட்டு, ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக மவுண்ட்பேட்டன் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைத்தார்.

சிறப்பு மிக்க அந்த வரலாற்று நிகழ்வுக்கு மீண்டும் புத்துயிருட்டும் வகையில், 2023ம் ஆண்டு மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, செங்கோலுக்கு வேத முறைப்படி பூஜைகள் செய்து , ஆதீனங்கள் புடைசூழ, செங்கோலை உயர்த்தி பிடித்த படி புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து , சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தர்மத்தின் அடையாளமாக திகழும் வரலாற்று சிறப்புமிக்க ‘செங்கோல்’ ஐ நிலைநிறுத்தினார்.

அவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் என்றும், தர்மத்துடன் இந்தியா விளங்குவதற்கு புதிய நாடாளுமன்றம் சாட்சியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பை மாற்றிவிடுவார்கள் என்ற எதிர்கட்சிகளின் பிரச்சாரத்துக்கு செவி சாய்க்காமல் இந்திய மக்கள் 3வது முறையாக நாட்டை வழிநடத்த பிரதமர் மோடியை தேர்வு செய்திருக்கிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், 18 வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே, நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ் வாதி கட்சி எம்.பி.யின் கோரிக்கை, மக்களவை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆதீனங்கள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல் நீதியின் அடையாளம் என்றும், ஆனால் அதை அகற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி எம்.பி கூறியிருப்பது, தமிழக ஆதீனங்களை அவமானப்படுத்தும் செயலாகும் என்றும் விமர்சித்துள்ள, தமிழக பாஜக மாநில தலைவரான அண்ணாமலை, சமாஜ்வாதி கட்சி எம்.பி.யின் கருத்துக்கு திமுகவின் பதில் என்ன ? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும், பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, இந்தியா மற்றும் தமிழ் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி அவமதித்துவிட்டது என்றும், இந்த செங்கோல் அவமதிப்பை திமுக ஆதரிக்கிறதா ? என்பதை திமுக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய சின்னமான செங்கோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இண்டியா கூட்டனி கட்சியினரின் அறியாமையை காட்டுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் , தனது எக்ஸ் தளத்தில் தமிழில் இந்த விவகாரம் தொடர்பாக பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எப்போதுமே சமாஜ்வாதி கட்சி மதிப்பதில்லை என்றும், சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணி கட்சிகளின் செங்கோல் பற்றிய கருத்துக்கள் அவர்களின் அறியாமையை காட்டுகிறது என்றும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

முதலில் ராமரை இழிவுபடுத்திய இந்தியா கூட்ட்டணி கட்சிகள் இப்போது செங்கோலுக்கு எதிராக பேசி இருப்பது , தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று பலரும் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.

Tags: Scepter Controversy!: Indy alliance insults Tamil culture!
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை திசைதிருப்ப முயற்சி! – அண்ணாமலை

Next Post

அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் தெலுங்கர்கள்!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies