கள்ளக்குறிச்சி கணியாமூர் கலவரம் தொடர்பாக ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக்கூறி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு, பள்ளி வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஸ்ரீமதியின் தாயாரை விசாரிக்கவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியதையடுத்து கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடம் சுமார் 2 அரை மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தாயார் செல்வி, அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பதிலளித்துள்ளதாக தெரிவித்தார்.