உத்தரப்பிரதேச மாநிலம், பஹரைச் பகுதியில் வெள்ள பாதிப்பை தடுக்க 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஜியோ டியூப்கள் நிறுவப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழை வெள்ள பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பஹரைச் பகுதியில் மண் அரிப்பை தடுப்பதற்காக நீர்வளத்துறை சார்பில் ஜியோ டியூப்கள் நிறுவப்பட்டுள்ளன.
குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஜியோ டியூப்கள் நிறுவப்பட்டுள்ளதால் பஹரைச் பகுதியில் மண் அரிப்பு தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.