இலவச பேருந்துகளில் பயணிக்கும் தூய்மை பணியாளர்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் நாள்தோறும் தஞ்சை பழைய பேருந்து நிலையத்துக்கு சென்று அங்கிருந்து பணிக்கு செல்கின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களை கண்டால் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்துவதில்லை எனவும், தரக்குறைவாக பேசுவதாகவும் கூறி 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் தூய்மை பணியாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.