உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஃபுல்லெரா என்ற கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் பிரசங்கம் நிகழ்த்தினார்.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள், எட்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். .கூட்ட நெரிசலில் மேலும் பலர் உயர்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.