ஒளிரப்போகும் அயோத்தி ரூ.85,000 கோடி முதலீட்டில் திட்டங்கள் ரெடி!
Jul 27, 2025, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒளிரப்போகும் அயோத்தி ரூ.85,000 கோடி முதலீட்டில் திட்டங்கள் ரெடி!

Web Desk by Web Desk
Jul 3, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2033ஆம் ஆண்டுக்குள் அயோத்தியை உலகின் சிறந்த நகரமாக்க, உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, 85,000 கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII), “மைக்ரோ-எண்டர்பிரைஸ் டெவலப்மென்ட் புரோகிராம்ஸ்”- MEDP என்ற பயிற்சித் திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை மக்களிடையே சுயவேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராமப் கிராமப்புறங்களில் பல பயிற்சிகளை நடத்தி வருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சமீபத்தில் உத்தரபிரதேச சுற்றுலாத் துறையுடன் சேர்ந்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரை உலகின் சிறந்த நகரமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதற்காக சுமார் 85 000 கோடி ரூபாய் முதலீட்டில் செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையிலான, உத்தர பிரதேசஅரசு, அயோத்தியின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து உள்ளடக்கிய 27 முக்கிய அம்சத் திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக, சாலைகள் மற்றும் சாலையோரங்களில் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்துதல், அயோத்தியை மற்ற நகரங்களுடன் இணைக்கும் ரயில் பாதைகளை விரிவுபடுத்துதல், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களை நவீனப்படுத்துதல், ஹெலிகாப்டர் சேவைகள் வழங்குதல், விமான நிலையத்தை மேம்படுத்துதல் என திட்டமிடப்பட்டுள்ளது.

கோயில் அருங்காட்சியகம், மெழுகு அருங்காட்சியகம், சந்தியா சரோவர், அயோத்தியின் சந்தை உட்பட அயோத்தியில் உள்ள 37 மதத் தலங்களை நவீனமயமாக்கவும் பல திட்டங்கள் அயோத்தியில் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், நகரின் முக்கியமான 39 சாலைகளில் உள்ள சந்திப்புக்களில் புராண கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

அயோத்தியில் உள்ள புனித நதியான சரயுவில், சூரிய சக்தியில் இயங்கும் நவீனப் படகு போக்குவரத்து சேவைகள் மற்றும் விதவிதமான நீர் விளையாட்டுக்கள் அறிமுகப் படுத்தப் பட இருக்கின்றன.

சரயு நதிக் கரையில் சுற்றுலாவினரை மகிழ்விக்கும் வகையில், ஒலி-ஒளி நிகழ்ச்சிகளும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளன.

இது மட்டுமில்லாமல் , அயோத்தியில் உள்ள பிற கோயில்களையும் புனரமைப்பு செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய இடங்களில், 140 மொழிகளில் வானிலை முன்னறிவிப்புகள், 28 வெவ்வேறு மொழிகளில் வழிகாட்டி பலகைகள், வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவீன அயோத்தியின் வளர்ச்சிக்காக உருவாக்கிய திட்டங்கள் சர்வதேச தரத்தில் உள்ளதாக இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவீன அயோத்தியின் ஒரு பகுதியாக, நகரில் சர்வதேச விமான நிலையமும் சர்வதேச பேருந்து நிலையமும் உருவாக்கப்பட்டு வருகின்றன

குறிப்பாக, அயோத்தியில், குப்தர் காட் முதல் லக்ஷ்மண் காட் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு 400க்கும் மேற்பட்ட சூரிய ஒளி தெரு மின் விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகின் மிக நீளமான சோலார் தெருவிளக்கு திட்டம் இது தான் என்று இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர். சுனில் சுக்லா தெரிவித்திருக்கிறார்.

இந்த திட்டங்களில் பல ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டன என்றும், மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: 000 crore!Ayodhya will light up with an investment of Rs.85projects are ready!
ShareTweetSendShare
Previous Post

பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் உறுதி? அதிர்ச்சி தகவல்!

Next Post

ஆன்மீக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Related News

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies